தீபா தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள்.
அன்று கணிதத்தேர்வு. அனைவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அவள்
கணிதத்தில் கொஞ்சம் ‘வீக்’. இது வரை எழுதிய தேர்வுகளில் நாற்பது மார்க்கை
தாண்டியதில்லை.
இன்று அவள்
எழுதுகின்றது முக்கியமான தேர்வானதால், அவளுக்குள் தான் பாஸ் ஆவாளோ என்ற
பயம். ஆகவே அன்று காலையில், தீப்பெட்டி அளவிலான ஒரு சின்ன துண்டு
காகிதத்தில் சில கணித சூத்திரங்களை எழுதி தன் காலுறைக்குள் மறைத்து
வைத்திருந்தாள். தேர்வை கண்காணித்து கொண்டிருந்த ஆசிரியர் பாண்டியன்,
தன்னுடைய மேஜையில் அமர்ந்ததும், மெதுவாக அந்த பிட்டுத் தாளை எடுத்து தன்
வினாத்தாளினடியே வைத்துக் கொண்டாள்.